Aug 10, 2026 - 03:19 PM

மாளிகாவத்தை, பி சி சி பாலத்திற்கு அருகில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் CCTV காணொளிகள் 'அத தெரண'வுக்குக் கிடைத்துள்ளன.
மாளிகாவத்தை, பி சி சி பாலத்திற்கு அருகில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர், 'கஞ்சிபானி இம்ரான்' எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரின் நெருங்கிய உறவினர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.













