Header Logo
சினிமா
காதலித்தும் கல்யாணம் செய்யாத விஜய் - த்ரிஷா!

Aug 10, 2026 - 03:28 PM

காதலித்தும் கல்யாணம் செய்யாத விஜய் - த்ரிஷா!
Mobitel inner

'கில்லி' பட சமயத்தில் நடிகர் விஜய்யும் த்ரிஷாவும் காதலித்தார்கள். ஆனால், விஜய்யின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் பிரிந்துவிட்டதாக நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார். 

நடிகர் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கிய பிறகு, அவருக்கும் த்ரிஷாவுக்கும் உள்ள உறவு பற்றி மீண்டும் பேச்சு எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன், விஜய் தன் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யவிருப்பதாகவும், அதற்கு த்ரிஷாதான் காரணம் என்றும் வதந்திகள் பரவின. 

விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் இடையே இருந்த நட்பு உண்மையா? அவர்கள் ஏன் பிரிந்தார்கள்? இத்தனை நெருக்கமாக இருந்தும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? இந்த எல்லா கேள்விகளுக்கும் த்ரிஷாவை தன் மகள் போலக் கருதும் மூத்த நடிகை குட்டி பத்மினி ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார். 

குட்டி பத்மினி, "த்ரிஷா எனக்கு மகள் போன்றவர். தேவையில்லாமல் அவர் மீது அவதூறு பேசுவது வருத்தமளிக்கிறது. விஜய்யுடன் த்ரிஷா நட்பாக இருந்ததால்தான், விஜய்யின் வாழ்க்கையில் புயல் வீசியது என்று சொல்வதெல்லாம் சுத்தப் பொய்" என்று கூறியுள்ளார். 

மேலும் குட்டி பத்மினி, "விஜய் - சங்கீதா இடையே கருத்து வேறுபாடு இப்போது ஏற்பட்டதல்ல. பல ஆண்டுகளாகவே அவர்களுக்குள் இந்தப் பிரச்னை இருந்தது. கணவன் - மனைவிக்குள் ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆனால், எல்லாவற்றுக்கும் ஒரு பெண்ணை மட்டும் குறை சொல்வது முற்றிலும் தவறு" என்றார். 

விஜய் - த்ரிஷா திருமணம் ஏன் நடக்கவில்லை என்பது குறித்தும் பத்மினி பேசினார். "2004 இல் வெளியான 'கில்லி' படப்பிடிப்பின் போது விஜய்யும் த்ரிஷாவும் காதலித்தது உண்மைதான். ஆனால், அவர்கள் ஒன்று சேராமல் போனதற்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்தான் காரணம். அவருக்கு இந்த உறவில் விருப்பம் இல்லை" என்று பத்மினி கூறினார். 

"அதற்குப் பிறகு பல வருடங்கள் அவர்கள் சந்திக்கவே இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் மீண்டும் சேர்ந்து நடித்தார்கள். அதற்கும் விஜய்யின் திருமண வாழ்க்கை விரிசலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, விஜய்யின் குடும்பப் பிரச்னைக்கு த்ரிஷாதான் காரணம் என்பது முற்றிலும் பொய்" என்று குட்டி பத்மினி பேட்டியை முடித்தார்.


MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara