Header Logo
செய்திகள்
மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என ரஞ்சித் ஆண்டகை அறிவிப்பு

Aug 10, 2026 - 05:18 PM

மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என ரஞ்சித் ஆண்டகை அறிவிப்பு
Mobitel inner

கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வித் தொகுப்பின் 2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் மேல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான கடமைகளைத் தவறவிட்ட குற்றச்சாட்டில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்த தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

 

மரண தண்டனையானது மனித கண்ணியத்தை மீறுவதாகவும், திருச்சபையின் போதனைகளின்படி எந்தவொரு மரண தண்டனையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கார்டினல் ஆண்டகை சுட்டிக்காட்டினார்.

 

இருப்பினும், இலங்கை நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மை மீது தாம் முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதன் தீர்மானங்களிலோ அல்லது விவாதங்களிலோ எந்த வகையிலும் தலையிட உத்தேசிக்கவில்லை என்றும் கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.

 

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் விவாதச் சூழலில், கொழும்பு பேராயர் இல்லம் இத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறது.

 

இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் வெளிக்கொணர்வதும், நாட்டின் சட்டத்திற்கு அமைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதும் கொழும்பு பேராயர் இல்லத்தின் தீவிர எதிர்பார்ப்பாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara