Header Logo
செய்திகள்
ரத்மலானே சைமா உட்பட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்

Aug 10, 2026 - 05:03 PM

ரத்மலானே சைமா உட்பட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்
Mobitel inner

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா” உட்பட மூன்று சந்தேகநபர்கள் இன்று (10) பிற்பகல் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL315 என்ற விமானம் மூலம் இன்று பிற்பகல் 4:28 மணியளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்ததாக அததெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

மலேசியாவில் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஓலுகல உள்ளிட்ட சிறப்பு பொலிஸ் குழுவொன்று மலேசியா சென்றிருந்தது.

 

இந்த மூன்று சந்தேகநபர்களில் ஒருவர், முக்கிய பாதாள உலகக் குற்றவாளியான “கஞ்சிபானி இம்ரான்” என்பவரின் முதன்மை உதவியாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

இலங்கை பொலிஸ் குழுவும் மலேசிய பொலிஸாரும் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போதே, தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா” உள்ளிட்ட இந்த மூன்று சந்தேகநபர்களும் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டனர்.


MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara