Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
கஞ்சா பயிரிட்டவரிடம் இலஞ்சம்: கைதான 4 பொலிஸாருக்கு பிணை!

Aug 17, 2026 - 06:48 PM

கஞ்சா பயிரிட்டவரிடம் இலஞ்சம்: கைதான 4 பொலிஸாருக்கு பிணை!
Mobitel Inner 1278

தனமல்வில தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிகவெவ பகுதியில் கஞ்சாத் தோட்டமொன்றைச் சோதனையிட்டு, அதன் உரிமையாளர்களிடம் ரூபா 5 இலட்சம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பிணையில் செல்ல அனுமதித்து வெல்லவாய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஒருவருக்கு தலா 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

மொனராகலை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சிலர் அண்மையில் நிகவெவ பகுதியில் சோதனையொன்றை நடத்தியுள்ளதோடு, இதன்போது அந்த கஞ்சாத் தோட்டத்தின் உரிமையாளரிடமிருந்து ரூபா 5 இலட்சம் இலஞ்சம் பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொனராகலை வலய ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள், ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள் சாரதி எனப் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


MOST READ

காணொளி
ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

Mobitel 1278