Header Logo
SLIC
Rhythams of Lanka
ஏனையவை
கடற்றொழில் அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்!

Aug 20, 2026 - 10:06 AM

 கடற்றொழில் அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்!
Mobitel Inner 1278
EDEX Inner

"சலுகை மற்றும் சுகபோகங்கள் இல்லாத, மக்களுக்கான அரசியலை முன்னெடுத்ததாலேயே மக்கள் எமக்கு ஆணையளித்தனர். அதற்கமையவே நாம் தற்போது செயல்பட்டு வருகிறோம். மக்கள் பணத்தை வீணடிக்கும் வகையில் நாம் எவ்வித சலுகைகளையும் பெறவில்லை," என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். 

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 15 மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களுக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள 112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (19) கொழும்பில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

"இன்று நியமனம் பெற்றுள்ள எவரும் எங்களைத் தொடர்புகொண்டு கோரிக்கை வைக்கவில்லை. அரசியல் சிபாரிசுகளின் அடிப்படையில் ஆள்தேர்வு செய்யப்படுவதும் இல்லை. அனைத்து நியமன நடைமுறைகளும் முறைப்படியே பின்பற்றப்படுகின்றன. இதில் எந்தவிதக் கட்சிப் பாகுபாடும் காட்டப்படவில்லை, திறமையானவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இன்று பதவி நியமனம் பெறும் நீங்கள் இதே நிலையிலேயே நீடிக்கப் போவதில்லை. எதிர்காலத்தில் உங்களுக்குப் பதவி உயர்வுகளும் சம்பள உயர்வுகளும் கிடைக்கப்பெறும். 

டிஜிட்டல் துறை குறித்த அனுபவமும் தொழில்நுட்ப அறிவும் உங்களுக்கு உண்டு. உங்களுக்குத் தேவையான வசதிகளை நாம் செய்து தருவோம். அவற்றைப் பயன்படுத்தி, எமது கடற்றொழிலாளர்களுக்கும் டிஜிட்டல் மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த அறிவை வழங்கும் வேலைத்திட்டங்களை நீங்கள் முன்னெடுக்க வேண்டும். 

இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் அனைத்துக் கடற்றொழில் அதிகாரிகளுக்கும் மின்சார மோட்டார் சைக்கிள் (Electric Motorcycle) ஒன்றை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதற்காக எமது அமைச்சின் செயலாளர் பெரிதும் முயன்றுள்ளார். 

எனவே, நீங்கள் உங்களின் சேவையை மக்களுக்குச் சிறப்பாக வழங்க வேண்டும். 

அதேவேளை, சலுகைகளுக்காகவோ சுகபோகங்களுக்காகவோ நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. எமது அணியின் அரசியலே அதுதான். இதனால்தான் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக ஆணையளித்தனர். 

அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் சலுகைகளை நாம் நிராகரித்துள்ளோம். ஜனாதிபதியும் பிரதமரும் கூட வீண் விரயங்களைச் செய்யாமல், மக்களின் பணத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தி வருகின்றனர். அமைச்சர்களுக்குரிய உத்தியோகபூர்வ மாளிகைகளை நாங்கள் பெறவில்லை, கூடுதல் பாதுகாப்பையும் கோரவில்லை," என்று அவர் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

செம்மணியில் 110 நாட்கள் அகழ்வாராய்ச்சியில் 583 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணியில் 110 நாட்கள் அகழ்வாராய்ச்சியில் 583 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

பாராளுமன்றில் நன்றிக் கடன் தீர்த்த அர்ச்சுனா!

பாராளுமன்றில் நன்றிக் கடன் தீர்த்த அர்ச்சுனா!

மாளிகை போன்ற ஒரு வீட்டை கட்டி இருக்கின்றோம்!

மாளிகை போன்ற ஒரு வீட்டை கட்டி இருக்கின்றோம்!

கொள்கை ரீதியான முடிவை தான் எதிர்பார்க்கின்றோம்!

கொள்கை ரீதியான முடிவை தான் எதிர்பார்க்கின்றோம்!

இடமாற்றம் ஒரு தீர்வு கிடையாது!

இடமாற்றம் ஒரு தீர்வு கிடையாது!

தன்னிச்சையாகவே செயற்படுகின்றது!

தன்னிச்சையாகவே செயற்படுகின்றது!

போரதீவுப்பற்று ஏன் உள்ளடக்கப்படவில்லை?

போரதீவுப்பற்று ஏன் உள்ளடக்கப்படவில்லை?

Mobitel 1278