Aug 20, 2026 - 10:11 AM





ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டன.
இதனையடுத்து, குறித்த பிரதிவாதிகள் இருவரையும் பிணையில் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்தக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

























