Aug 20, 2026 - 09:53 PM





காலமான பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினியின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் சனிக்கிழமை (22) நடைபெறும் என்று பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் மாலை 5.00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடலம் நுகேகொடை, விஜயபா மாவத்தையில் அமைந்துள்ள நந்தா மாலினி இசை ஆசிரமத்தில் நாளை (21) முற்பகல் 10.00 மணி முதல் வைக்கப்படவுள்ளது.

























