Header Logo
SLIC
வணிகம்
MAS Holdings மற்றும் Brandix லங்காவின் பங்களிப்புடன் ரோயல் கல்லூரி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஸ்மார்ட் ஸ்கூல் திட்டம் ஆரம்பமாகிறது

Aug 25, 2026 - 02:51 PM

 MAS Holdings மற்றும் Brandix லங்காவின் பங்களிப்புடன் ரோயல் கல்லூரி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஸ்மார்ட் ஸ்கூல் திட்டம் ஆரம்பமாகிறது
Mobitel Inner 1278
EDEX Inner

MAS ஹோல்டிங்ஸ் மற்றும் Brandix லங்கா ஆகியவற்றின் முழு ஒத்துழைப்புடன், கொழும்பு ரோயல் கல்லூரியை முழுமையான ஸ்மார்ட் பள்ளியாக மாற்றும் பெரும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ரோயல் கல்லூரி சங்கம் அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 

180 மில்லியன் ரூபா செலவில் செயற்படுத்தப்படும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமானது, மாணவர்களுக்காக மிகவும் எளிதில் அணுகக்கூடிய மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற கற்றல் சூழலை உருவாக்குவதாகும். மேலும், கற்றல் செயல்முறையை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பம், சிறப்புப் பயிற்சி மற்றும் வளங்களால் ஆசிரியர் குழுவை தயார்படுத்துவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் வகுப்பறைகள் 141 ஐ நிறுவுவதற்கும், பாடசாலை வளாகம் முழுவதும் பரவிய ஃபைபர் ஒப்டிக் வலையமைப்பு, ஒருங்கிணைந்த கற்றல் முறைமை மற்றும் பாடசாலை முகாமைத்துவ முறைமை, விரைவான இணைப்பு வசதிகள் மற்றும் கிளவுட் உட்கட்டமைப்பு, ஆசிரியர் பயிற்சி மையத்துடன் கூடிய இலத்திரனியல் கூட்டுறவு வகுப்பறைகள் அத்துடன் டிஜிட்டல் கல்வி வீடியோக்களை உருவாக்கும் ஸ்டுடியோ வசதிகளை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 

கொழும்பு றோயல் கல்லூரியின் முன்னாள் மாணவர்களான MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் மஹேஷ் அமலியன் மற்றும் பிரான்டிக்ஸ் லங்கா நிறுவனத்தின் குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்ரோப் ஓமர் ஆகியோரின் சிறப்பு நிதிப் பங்களிப்பு காரணமாக இந்த திட்டம் உண்மையானதாக மாறியது. அவர்களின் இந்த முழு ஒத்துழைப்பு மற்றும் தலையீட்டின் மூலம், வேகமாக மாறிவரும் நவீன தொழில்நுட்ப உலகிற்கு ஏற்றவாறு இந்நாட்டின் சந்ததியினரின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும், அவர்களை எதிர்காலத்திற்காக தயார்படுத்துவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். 

இந்த சிறப்புத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் மஹேஷ் அமலியன் அவர்கள், உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் போது, இளைய தலைமுறையினர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான திறன்களும் தகுதிகளும் மாறுகின்றன. நமது கல்வி முறையும் அந்த வேகத்திற்கு இசைவான வகையில் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான முறையில் கற்றுக்கொள்வதற்கும், புதிய திறன்களையும் ஆய்வு சார்ந்த அறிவையும் மேம்படுத்திக்கொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியர்கள் மிகவும் வெற்றிகரமாக கற்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான நவீன கருவிகளை வழங்கும் இந்த நடவடிக்கை, இலங்கையின் பாடசாலை முறைமையை புத்தாக்கப்படுத்துவதற்கான முன்மாதிரியான திட்டமாகவும் குறிப்பிடப்படலாம் என்று கூறினார். 

இது குறித்து கருத்து தெரிவித்த பிரான்டிக்ஸ் லங்கா நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்ரோப் ஓமார் அவர்கள், இலங்கையின் இளைய தலைமுறையினரின் திறமைக்கு எந்தக் குறைவும் இல்லை. நமது பிள்ளைகளுக்கு உலகின் சிறந்தவற்றுடன் போட்டியிடத் தேவையான சரியான சூழலையும் கருவிகளையும் வழங்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் அந்த வலிமை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் மூலம் மிகவும் வேகமாக கற்றுக்கொள்வதற்கும், மிகவும் நன்றாக சிந்திப்பதற்கும், எதிர்காலத்திற்காக வெற்றிகரமாக வடிவமைப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும். றோயல் கல்லூரி அன்று நமக்கு வழங்கியதை நன்கு அறிந்த மஹேஷ் மற்றும் நான் இருவரும் இணைந்து அடுத்த தலைமுறைக்காக செய்யக்கூடிய சிறந்த முதலீடு இதுவென நம்புகிறோம் என்று கூறினார். 

வகுப்பறைகளுக்கு தொழில்நுட்ப உபகரணங்களை அறிமுகப்படுத்துவதுடன், இந்த ஸ்மார்ட் பாடசாலைத் திட்டம் மிகவும் நெருக்கமான விதத்தில் மற்றும் ஒவ்வொரு மாணவருக்கும் பொருந்தக்கூடிய தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் முறைகளை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் விமர்சன சிந்தனையை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது. மேலும், வகுப்பறைக்கு வெளியிலும் கூட பாடங்களையும் கல்விச் சாதனங்களையும் அணுகும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கிறது, மேலும் ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி வழங்கப்பட்டு, மிகவும் வளமான கல்வி உள்ளடக்கங்களை உருவாக்கும் திறனை அவர்களுக்கு வழங்குகிறது. இதில் உள்ள மற்றொரு சிறப்பு அம்சமாகும், உயர்தர/மேல்நிலை வகுப்பறைகள் இரண்டு கூட்டுறவு கற்றல் இடங்களாக புதுப்பிக்கப்படுகின்றன. அதன் மூலம், கொழும்பு றோயல் கல்லூரியில் நேரடியாக நடைபெறும் வகுப்பறை விரிவுரைகள் மற்றும் பாடத்தொடர்களுடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அமைந்துள்ள அழைக்கப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களும் நேரடியாக இணைந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. 

இங்கு கருத்து தெரிவித்த றோயல் கல்லூரியின் அதிபர் அதுல விஜேவர்தன அவர்கள் பின்வருமாறு கூறினார்: 

இந்த ஸ்மார்ட் பள்ளித் திட்டத்தை உண்மையானதாக மாற்றுவதற்காக மஹேஷ் அமலியன், அஷ்ரோப் ஓமர், MAS ஹோல்டிங்ஸ், பிரான்டிக்ஸ் லங்கா மற்றும் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை வழங்கிய சிறப்புப் பங்களிப்பிற்காக எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்கள் செய்த இந்த நன்கொடை எங்கள் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் விதத்தை முற்றிலுமாக மாற்றும், மேலும் மிகவும் நெருக்கமான விதத்தில் மற்றும் அர்த்தமுள்ள கற்றல் அனுபவங்களை உருவாக்க எங்கள் ஆசிரியர் குழுவிற்கு பெரும் வலிமையை வழங்கும். எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகச் செய்யப்பட்ட விலைமதிப்பற்ற முதலீடான இது, எதிர்கால ராஜகீய சந்ததியினருக்கு மகத்தான பணியை நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன். 

இந்த திட்டம் பற்றி கருத்து தெரிவித்த றோயல் கல்லூரி சங்கத்தின் செயலாளர் பசன் வனிகசேகர அவர்கள், இந்த திட்டம் மூலம் தங்களின் எதிர்காலத்திற்காக பாடசாலையை மேலும் வலுப்படுத்துவதற்கான முன்னாள் றோயலீஸ்ட்ர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நன்கு பிரதிபலிக்கின்றது. எங்களுக்காக இந்த தூரநோக்கு ஒத்துழைப்பை வழங்கியமைக்காக தேசமான்ய மஹேஷ் அமலியன், அஷ்ரோப் ஓமர், MAS ஹோல்டிங்ஸ் மற்றும் பிரான்டிக்ஸ் லங்கா ஆகிய நிறுவனங்களுக்கு எங்கள் உண்மையான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களின் இந்த பங்களிப்பு வெறுமனே றோயலீஸ்ட்களுக்கு மட்டுமன்றி, மொத்த மகத்தான இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்காகச் செய்யப்பட்ட சிறந்த முதலீடாக சுட்டிக்காட்டப்படலாம் என்று கூறினார். 

றோயல் கல்லூரி சங்கம் இந்த டிஜிட்டல் மாற்ற செயல்முறையின் மூலம் பெறப்படும் அனைத்து நடைமுறை அனுபவங்களையும் பயன்படுத்தி, உத்தியோகபூர்வ ஸ்மார்ட் பள்ளி செயல்பாட்டு கையேட்டைத் தயாரிப்பதற்கும் இலக்காகக் கொண்டுள்ளது. அடுத்த கட்டத்தின் கீழ், அரசாங்க கல்வி அதிகாரிகள், நன்கொடையாளர்கள், தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கூட்டாண்மையை ஏற்படுத்துவதன் மூலம், இந்த தொழில்நுட்ப மாதிரியானது இலங்கை முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய பாடசாலைகளின் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.


MOST READ

காணொளி
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

Mobitel 1278