Header Logo
SLIC
ஏனையவை
அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் மலரட்டும்!

Aug 26, 2026 - 07:45 AM

அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் மலரட்டும்!
Mobitel Inner 1278
EDEX Inner

உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இறைத்தூதர் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி தின நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் எனபாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். 

புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. . 

மனிதநேயம், சகோதரத்துவம், நீதி, அன்பு, பொறுமை மற்றும் சமத்துவம் ஆகிய உயரிய பண்புகளை உலகிற்கு எடுத்துரைத்த நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையும் போதனைகளும் இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமான வழிகாட்டியாகும். 

குறிப்பாக, பல்வேறு இனங்களும் மதங்களும் சமூகங்களும் ஒன்றிணைந்து வாழும் இலங்கை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். 

நபி (ஸல்) அவர்கள் போதித்த மனிதநேயத்தையும், அயலவர் உரிமைகளையும், பிற சமூகங்களின் கண்ணியத்தையும் மதிக்கும் பண்பாட்டையும் நாம் நடைமுறையில் கடைப்பிடிப்பதன் மூலம், இன, மத வேறுபாடுகளைக் கடந்து அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். 

இந்த புனித நாளில், இலங்கையில் வாழும் அனைத்து இன, மத மக்களிடையேயும் சகோதரத்துவமும் நல்லிணக்கமும் மேலும் வலுப்பெறவும், எமது தாய்நாட்டில் நிரந்தர அமைதியும் சுபீட்சமும் நிலவவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

அனைவருக்கும் இனிய மீலாதுன் நபி தின நல்வாழ்த்துக்கள் என தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278