Aug 28, 2026 - 02:19 PM





இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்று விளையாடுவது தொடர்பாக இந்திய டி20 அணியின் முன்னாள் அணி தலைவர் சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மூன்றாவது முறையாக டி20 உலகக் கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது. தொடர்ந்து இரண்டு முறை டி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றி இந்திய அணி அசத்தியிருந்தது.
35 வயதான சூர்யகுமார் யாதவ், டி20 உலகக் கிண்ணத் தொடரில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. அதன்பிறகு ஐபிஎல் தொடரிலும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய டி20 அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவது குறித்த கேள்விக்கு சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார். அவர் தெரிவிக்கையில்,
“என்னால் முடிந்த அளவுக்கு கடுமையாக உழைத்து வருகிறேன். எல்லாம் சரியாகச் சென்றால், இந்திய அணியில் நான் மீண்டும் இடம்பிடிப்பேன்” என தெரிவித்தார்.























