Header Logo
SLIC
செய்திகள்
பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய உத்தியோகத்தர்கள்

Aug 29, 2026 - 06:17 PM

பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய உத்தியோகத்தர்கள்
Mobitel Inner 1278
EDEX Inner

எதிர்காலத்தில் பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். 

இன்று (29) நடைபெற்ற ஊவா மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொலிஸ்மா அதிபர் இதனைக் குறிப்பிட்டார். 

இதன்போது கருத்துத் தெரிவித்த பொலிஸ்மா அதிபர், மனித வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போதாமை குறித்து ஜனாதிபதி மற்றும் அமைச்சருக்கு அறிவித்ததன் பின்னர், பொலிஸ் சேவைக்கு 10,000 பேரை இணைத்துக்கொள்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். 

அத்துடன், தற்போது பொலிஸ் சேவையில் 38,000 உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாகவும், அந்தப் பற்றாக்குறையுடனேயே சேவையை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார். 

மேலும், ஓய்வு மற்றும் ஏனைய காரணங்களால் வருடமொன்றுக்கு சுமார் 2,000 பேர் பொலிஸ் சேவையிலிருந்து விலகுவதாகவும் பொலிஸ்மா அதிபர் இங்கு மேலும் தெரிவித்தார். 

எமக்குத் தேவையான மனித வளங்கள் போதியளவு இன்மை, உத்தியோகத்தர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் போதாமை தொடர்பில் ஜனாதிபதிக்கும், அமைச்சருக்கும் அறிவித்ததன் பின்னர் மனித வளத்தை அதிகரிக்க 10,000 பேரை இணைத்துக்கொள்ள எமக்கு அனுமதி கிடைத்தது. 

ஏனெனில், நாங்கள் ஆட்சேர்ப்பு செய்யாவிட்டால், வயது முதிர்வு மற்றும் ஏனைய காரணங்களால் சேவையிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு இரண்டாயிரம் அளவில் இருக்கும். 

இதற்கமைய, இன்றைய நிலவரப்படி சுமார் 38,000 அத்தியாவசிய உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையுடனேயே இந்த சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278