Header Logo
SLIC
வணிகம்
SLIIT-Massey தொழில்நுட்ப உச்சிமாநாடு: பேரிடர் காலங்களில் மேம்பட்ட மற்றும் திறன்மிக்க செயல்பாடுகளை ஊக்குவித்தல்

Aug 31, 2026 - 05:01 PM

SLIIT-Massey தொழில்நுட்ப உச்சிமாநாடு: பேரிடர் காலங்களில் மேம்பட்ட மற்றும் திறன்மிக்க செயல்பாடுகளை ஊக்குவித்தல்
Mobitel Inner 1278
EDEX Inner

ICTICM 2026: நெருக்கடி காலத் தயார்நிலை மற்றும் மீள்திறனை வலுப்படுத்த உலகளாவிய ஆராய்ச்சியை நடைமுறைக்கு ஏற்ற கருவிகளுடன் இணைக்கிறது 

SLIIT மற்றும் Massey பல்கலைக்கழகம் (நியூசிலாந்து) ஆகியவை இணைந்து நெருக்கடி முகாமைத்துவத்திற்கான தொழில்நுட்பப் புத்தாக்கங்கள் குறித்த சர்வதேச மாநாட்டை (International Conference on Technology Innovations for Crisis Management - ICTICM 2026) நடத்தின. இதில் உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் கொள்கை நிபுணர்கள் ஒன்றிணைந்தனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பேரிடர் முகாமைத்துவத்தை பாதிப்பு ஏற்பட்ட பின் செயல்படும் நிலையிலிருந்து முன்னெச்சரிக்கையுடன் தயாராகும் நிலைக்கு மாற்ற முடியும் என்பது குறித்து இதில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. 

இந்தக் கலப்பு முறை (நேரடி மற்றும் இணையவழி) உச்சிமாநாடானது, SLIIT Autonomous Intelligent Machines and systems (AIMS) Research Centre மற்றும் நியூசிலாந்தில் உள்ள Massey பல்கலைக்கழகத்தின் CRISISLab ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது. SLIIT-இன் கணினித் துறைப் பீடாதிபதி பேராசிரியர் பிரதீப் அபேகுணவர்தன மற்றும் Massey பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் பிரசன்னா ஆகியோர் இதற்கு இணைத் தலைவர்களாகச் செயல்பட்டனர். சுரன்ஜினி சில்வா மாநாட்டுச் செயலாளராகப் பணியாற்றினார். 

இந்த உச்சிமாநாடு குறித்து கருத்து தெரிவித்த SLIIT கணினித் துறைப் பீடாதிபதியும் ICTICM 2026-இன் இணைத் தலைவருமான பேராசிரியர் பிரதீப் அபேகுணவர்தன கூறியதாவது: “பேரிடர் ஏற்பட்ட பிறகு செயல்படுவதற்கான ஒரு கருவியாக மட்டுமே தொழில்நுட்பத்தை இனி கருத முடியாது. ICTICM 2026 மூலம், சமூகங்கள் அபாயங்களை முன்கூட்டியே அறியவும், விரைவாகச் செயல்படவும் மற்றும் திறம்பட மீண்டு வரவும் உதவும் நடைமுறைக்கு ஏற்ற, உள்ளூர் சூழலுக்குப் பொருத்தமான தீர்வுகளை உருவாக்க நாங்கள் உலகளாவிய நிபுணத்துவத்தை ஒன்றிணைக்கிறோம். 

செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), இயந்திரக் கற்றல் (machine learning), இணைய பொருட்கள் (Internet of Things), டிஜிட்டல் இரட்டைகள் (digital twins), தரவுப் பகுப்பாய்வு (data analytic), புவியியல் தகவல் அமைப்பு (GIS), தொலை உணர்வு (remote sensing), ரோபோட்டிக்ஸ் (robotics) மற்றும் முடிவெடுக்கும் ஆதரவு அமைப்புகள் (decision-support systems) ஆகியவற்றின் நடைமுறைப் பயன்பாட்டை மையமாகக் கொண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. நிகழ்நேரப் பேரிடர் மண்டல வரைபடம், முன்கூட்டியே கணிக்கும் அமைப்புகள், உள்கட்டமைப்பு கண்காணிப்பு மற்றும் உயிர் பிழைத்தவர்களைக் கண்டறிவதற்கும் கட்டமைப்பு அபாயங்களை அடையாளம் காண்பதற்கும் உதவும் கூட்டாக உருவாக்கப்பட்ட கருவிகள் உள்ளிட்ட பயன்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் விளக்கிக் காட்டினர். 

Curtin பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தின் பணிப்பாளரான பேராசிரியர் வென்சு சென் ஆற்றிய ஒரு முக்கிய உரையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு சார்ந்த முடிவெடுக்கும் அமைப்புகள் எவ்வாறு உள்கட்டமைப்பின் மீள்திறனை வலுப்படுத்த முடியும் என்பது குறித்து ஆராய்ந்தார். மேலும், வெடிப்புகள் மற்றும் நில அதிர்வுகளால் ஏற்படும் கடுமையான தாக்கங்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட Advanced Metaconcrete குறித்த தனது ஆய்வையும் அவர் முன்வைத்தார். 

ICTICM 2026 நிகழ்விற்கு 46 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சர்வதேச சக மதிப்பாய்வைத் தொடர்ந்து 28 ஆய்வுக் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், சதுப்புநில மறுசீரமைப்பு, நீர்ப்பிடிப்பு முகாமைத்துவம் மற்றும் நகர்ப்புற பசுமை உள்கட்டமைப்பு உள்ளிட்ட இயற்கை சார்ந்த அணுகுமுறைகள் குறித்த ஒரு குழு கலந்துரையாடலும், கனேடிய இணையப் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த கலாநிதி விந்தியா ரங்கோத்கே தலைமையிலான, சம்பவத்திற்குப் பதிலளித்தல் மற்றும் பேரிடர் மீட்பு குறித்த இணையப் பாதுகாப்புப் பயிலரங்கமும் இடம்பெற்றன. 

இலங்கை அறிவியல் மேம்பாட்டுச் சங்கம் தொழில்நுட்ப இணை ஆதரவாளராகப் பணியாற்றியதுடன், ஒரு நிபுணர் குழுவையும் ஏற்பாடு செய்தது. அத்துடன், அமர்வுத் தலைவர்கள் மற்றும் இணைத் தலைவர்களையும் நிகழ்விற்கு வழங்கியது. SLIIT International, IEEE GRSS Sri Lanka Chapter மற்றும் SLIIT-இன் கணினிப் பீடம் ஆகியவற்றிலிருந்து நிகழ்வுக்கான நிதி அனுசரணை கிடைத்தது. 

வெள்ளம், நிலச்சரிவுகள், புயல்கள் மற்றும் கடலோர அபாயங்கள் தொடர்ச்சியான இடர்களாக நீடிக்கும் இலங்கையைப் பொறுத்தவரை, உலகளாவிய ஆராய்ச்சியை உள்ளூரில் பயன்படுத்தக்கூடிய, செலவு குறைந்த மீள்திறன் தீர்வுகளாக மாற்றுவதன் மதிப்பை இந்த உச்சிமாநாடு வலுப்படுத்தியது. ICTICM 2026, தொழில்நுட்பம், நிலைபேற்றியல் மற்றும் நெருக்கடி முகாமைத்துவம் ஆகியவற்றின் ஒன்றிப்பில் பணியாற்றும் மாணவர்கள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களிடையே சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தியதுடன், அவர்களின் திறனையும் வளர்த்தது.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278