Header Logo
SLIC
விளையாட்டு
தோனி குறித்து வெளியான பரபரப்பு செய்தி!

Aug 31, 2026 - 05:30 PM

தோனி குறித்து வெளியான பரபரப்பு செய்தி!
Mobitel Inner 1278
EDEX Inner

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை தோனி கோரியதாகப் பரவி வரும் வதந்திகளை அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

மேலும், ஐபிஎல் தொடரில் தோனியின் எதிர்காலம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், அணியின் பங்குகளைப் பெறுவதில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் சில செய்திகள் பரவின. 

தோனி முதலில் சிஎஸ்கே அணியின் 25 சதவீத பங்குகளைக் கேட்டதாகவும், பின்னர் தனது கோரிக்கையை 20 சதவீதமாகக் குறைத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. அதற்குப் பதிலாக, சிஎஸ்கே நிர்வாகம் அவருக்கு 5.5 சதவீத பங்குகளை வழங்க முன்வந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், இந்தத் தகவல்கள் எதற்கும் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இல்லை. 

தோனி எந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார் தெரியுமா? சொத்து மதிப்பு இவ்வளவா? இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காசி விஸ்வநாதன் அளித்த பேட்டியில், "இந்த வதந்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை" என்று தெரிவித்துள்ளார். 

அடுத்ததாக, 2027 ஐபிஎல் தொடரில் தோனி தொடர்ந்து விளையாடுவாரா என்பது இரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. காயம் காரணமாக கடந்த சீசனில் தோனி ஒரு போட்டியில் கூட விளையாடாத நிலையில், சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. 

இந்நிலையில், தோனி இன்னும் தனது ஓய்வு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

"தான் விளையாடப் போவதில்லை என்று தோனி இதுவரை கூறவில்லை. எனவே, பொறுத்திருந்து பார்ப்போம்" என்று காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். 

முன்னதாக, தோனி எந்த ஒரு பொறுப்பில் இருந்தாலும் அவரை சிஎஸ்கே அணியுடன் எப்போதும் இணைத்து வைத்திருக்கவே நிர்வாகம் விரும்புகிறது என்று விஸ்வநாதன் குறிப்பிட்டிருந்தார். 

"தற்போது வரை நாங்கள் தோனியுடன் எதையும் விவாதிக்கவில்லை. அவர் தனது முடிவுகளைத் தனிப்பட்ட முறையில் எடுப்பார், அதற்கு நாங்கள் எப்போதும் மதிப்பளிக்கிறோம்" என்று காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278