Jun 5, 2025 - 09:37 AM -
0
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று (05) காலை 9 மணியளவில் அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார்.
சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இடம்பெற்றுவரும் விசாரணைகளுக்கு அமைவாக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.