Oct 29, 2024 - 04:05 PM -
0
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் இரண்டாவது ஈஸ்டர் வௌிப்படுத்தலின் ஊடாக ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், சம்பவம் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்திருந்து கூட ஒரு அரசியல் காரணத்திற்காக என தெரிவித்தார்.
குறிப்பிட்ட சிலரைக் காப்பாற்றவே விசாரணை நடத்தாமல் இவ்வாறான ஒரு விடயத்தை கூறியதாகவும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறான செயலை ஒருபோதும் செய்யாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.