வடக்கு
பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கோரி மாபெரும் போராட்டம்

Feb 12, 2025 - 05:45 PM -

0

பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கோரி மாபெரும் போராட்டம்

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றி பொது மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மாபெரும் போராட்டமொன்று இன்று (12) முன்னெடுக்கப்பட்டது. 

இந்த விகாரைக்கு எதிராக பல்வேறு அச்சுறுத்தல்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று மாலை முதல் ஆரம்பமாகிய இப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் இடம்பெற்றது. 

விகாரைக்கு முன்பாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சிவில் அமைப்புக்களும் பொது மக்களும் என பல நூற்றுக் கணக்கானோர் இன்று காலை முதல் ஒன்று திரண்டிருந்தனர். 

இப் போராட்டம் நடைபெறும் இடத்தில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு வைத்து தடைகள் போடப்பட்டு புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரமாக இருந்தது. 

இவ்வாறான பல்வேறு அச்சுறுத்தல்கள் கெடுபிடிகள் எதிர்ப்புப்களுக்கு மத்தியிலும் கறுப்பு கொடிகளுடன் பெருமளவில் திரண்ட தமிழ் மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குறிப்பாக அகற்று அகற்று சட்டவிரோத விகாரையை அகற்று, வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், இனப்படுகொலை இரானுவமே வெளியேறு, இந்த மண் எங்களின் சொந்தமண், கண்திறந்த புத்தருக்கு மண்மீது ஆசையா, எமது நிலம் எமக்கு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர். 

இதன் போது பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டதால் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டதால் முளுகல் நிலை ஏற்பட்ட பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது. 

எனினும் அச்சுறுத்தல்கள் எதிர்ப்புக்குகளுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் விகாரைக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05