செய்திகள்
பிறந்து 2 நாட்களேயான குழந்தையை விற்க முயன்ற தாய் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Jun 5, 2025 - 02:17 PM -

0

பிறந்து 2 நாட்களேயான குழந்தையை விற்க முயன்ற தாய் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிறந்து இரண்டு நாள்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில், 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயாருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க வழங்கினார். 

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 20,000 ரூபா அபராதமும், அபராதம் செலுத்தப்படாவிட்டால் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ
01
02
03
04
05