Jun 5, 2025 - 10:19 PM -
0
மொனராகலை, தொம்பகஹவெல பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள ஒரு குகையில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சடலத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்த பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்த 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.