Jun 9, 2025 - 02:38 PM -
0
அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர் உள்ளிட்ட அனுராதபுரம் பொசன் குழு மற்றும் பொலிஸாருடன் இணைந்து இம்முறையும் பொசன் நிகழ்வின் ஊடக பங்களிப்பை தெரண ஊடக வலையமைப்பு வழங்கி வருகிறது.
2009 ஆம் ஆண்டு முதல் 16 வது முறையாக இந்நிகழ்வில் தெரண கைகோர்த்துள்ளமை விசேட அம்சமாகும்.
அத்தோடு, புனித பூமியையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் வீதி வழிகாட்டல் பலகைகள் மற்றும் வீதித் தடைகளை நிறுவும் பணியிலும் தெரண ஊடக வலையமைப்பு பங்களிப்பை வழங்கியுள்ளது.
வீதித் தடுப்புப் பணிகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு 6 காவலரண்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.