செய்திகள்
வாய்க்காலில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

Jun 16, 2025 - 10:22 PM -

0

வாய்க்காலில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்ட குடியிருப்பு அருகே உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
 
இறந்தவர் கல் மடோ நகர் சம்பு குளம் பகுதியை நிரந்தர வதிவிடமாகவும், ஆறுமுகம் வீதி வட்டக்கச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தனபால சிங்கம் குமாரதாஸ் (வயது 54), குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 
இறந்தவரின் சடலம் கிளிநொச்சி பதில் நீதவான் முன்னிலையில் அப்பகுதியிலிருந்து எடுத்து, பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
 
இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05