Header Logo

செய்திகள்
இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு: பொலிஸ்மா அதிபர் அதிரடி உத்தரவு!

Mar 3, 2026 - 04:39 PM -

0

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு: பொலிஸ்மா அதிபர் அதிரடி உத்தரவு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

உலகளாவிய ரீதியில் எழுந்துள்ள நெருக்கடியான நிலைமையைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பேணுவதற்கு இடையூறு விளைவிக்கும் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் பொலிஸ்மா அதிபரால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய, தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள், அவற்றின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் மற்றும் தொடர்புடைய ஏனைய இடங்களின் பாதுகாப்பை பலப்படுத்தி விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள மற்றும் இங்கு தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் உயிர் மற்றும் சொத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரமும் செயற்படும் வகையிலான பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதன்கீழ் அவர்கள் தங்கியிருக்கும் இடங்கள், வர்த்தக நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள், குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படவுள்ளது. 

தேவை ஏற்பட்டால் இந்த பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முப்படையினரின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title