Header Logo
SLIC
செய்திகள்
நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது - ஜனாதிபதி

Aug 26, 2026 - 09:01 PM

நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது - ஜனாதிபதி
Mobitel Inner 1278
EDEX Inner

நாட்டில் மீண்டும் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். 

இன்று இடம்பெறும் நபிகள் நாயகத்தின் பிறந்ததினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 

நீண்டகால இன மோதல்கள் காரணமாக இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வாழும் அனைவரும் அந்த கொடூரமான அழிவுகரமான அனுபவங்களின் பாதிக்கப்பட்டவர்களாக மாறியுள்ளனர் என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். 

மேலும், மீண்டும் எவ்வித இன மோதல்களும் உருவாக இடமளிக்கப்பட மாட்டாது எனத் தான் உறுதியளிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் வலியுறுத்தினார். 

முன்னர் செல்வம், அதிகாரம், மதம் அல்லது கலாச்சாரத்தின் அடிப்படையில் சட்டம் வேறுபட்ட முறையில் செயற்படுத்தப்படுவதாகச் சமூகத்தில் ஒரு கருத்து நிலவிய போதிலும், நாட்டை கட்டியெழுப்புவதன் மிக முக்கிய பகுதியாகச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தற்போது உறுதிப்படுத்தி வருவதாக ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். 

அத்துடன், அரசாங்கத்துடனான அனைத்து முக்கிய கொடுக்கல் வாங்கல்களையும் வீட்டிலிருந்தபடியே இணையவழி முறையில் மேற்கொள்ளக்கூடிய அமைப்பொன்றை அறிமுகப்படுத்தி, அரச சேவையை மேலும் கவர்ச்சிகரமான தொழிற்துறையாக மாற்றுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

தாமும் அரசாங்கமும் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தினாலும் மக்களுக்குத் தீங்கு ஏற்பட இடமளிக்க மாட்டோம் என மேலும் உறுதியளித்த ஜனாதிபதி, வரவிருக்கும் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நாட்டின் மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டை விரைவுபடுத்தி, நல்லதொரு சமூகத்தை உருவாக்குவதையே எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். 

தீர்மானங்களை எடுக்கும் போது சாத்தியமான அனைத்துக் கோணங்களிலும் அது ஆராயப்படுவதால், சிறிய சிறிய முரண்பாடுகள் எழுந்தாலும் மக்களுக்காக எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் திரும்பப் பெறப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278