Mar 28, 2026 - 04:04 PM -
0
தமிழக அரசியல் சூடு பிடித்துள்ள நிலையில் புதிதாக கட்சி தொடங்கியவர்கள் ஆட்சியில் உள்ளவர்கள் கச்சை தீவை மீட்டு தருவோம் என்ற பொய்யான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் எம்.எம்.ஆலம் தெரிவித்தார்.
இதனை தமிழக மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் ஒரு நாட்டுக்கு இறமையுள்ள ஒரு பகுதியை மீட்டு தருவோம் என்று தேர்தலுக்காக பொய் பிரச்சாரங்களை கூறி வருகின்றனர்.
மக்கள் தெளிவடைய வேண்டும் இவ்வாறான பிரச்சினைகளால் தொடர்ந்தும் இந்திய மீனவர்கள் இல்லை தாண்டி எமது பகுதிக்கு வந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை அமைச்சருக்கு கூறிய போதும் அவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை தொடர்ந்தும் இவ்வாறான பிரச்சனைகள் இடம்பெற்று வருகிறது எனவே மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
--
