Header Logo

செய்திகள்
போதைப்பொருள் சோதனை: 7 பேர் சிக்கியதால் போக்குவரத்து அமைச்சு அதிரடி!

May 12, 2026 - 08:07 PM -

0

போதைப்பொருள் சோதனை:  7 பேர் சிக்கியதால் போக்குவரத்து அமைச்சு அதிரடி!

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் ஓட்டுநர்களை இலக்காகக் கொண்டு, விசேட அபாயகரமான போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்தைச் செயல்படுத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

 

பொதுப் போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்துவதுடன், பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

 

விடயப்பரப்பிற்குப் பொறுப்பான அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கருத்தாக்கத்திற்கு அமைய, வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையின் மற்றுமொரு கட்டம் இன்று (12) காலை கடவத்தை பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

 

இந்தத் திடீர் சோதனைகளுக்காக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் வைத்திய அதிகாரி லயனல் முஹந்திரம்கே தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டதுடன், அந்த நிறுவனத்தின் நடமாடும் ஆய்வகப் பேருந்தினுள் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

 

இதன்போது, கடவத்தை பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் என சுமார் 148 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 07 பேர் அபாயகரமான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த காலங்களில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் வீதி ஒழுக்கக் குறைபாடுகளுக்குக் காரணமான காரணிகளைக் கருத்திற்கொண்டு, போதைப்பொருள் பாவனையற்ற ஒழுக்கமான ஓட்டுநர்களை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என வைத்தியர் லயனல் முஹந்திரம்கே இதன்போது வலியுறுத்தினார்.

 

மேலும், போக்குவரத்து அமைச்சு, இலங்கை பொலிஸார் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஆகியவற்றின் முழுமையான ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், பயணிகள், பாதசாரிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பிற்காக நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

இந்தச் சோதனைகளின் மூலம் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கண்டறியப்படும் ஓட்டுநர்களுக்கு, நிறுவன ரீதியான சட்ட விதிகளின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்கப்படுவதோடு, நாட்டின் பொதுச் சட்டத்தின் கீழும் சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Comments
0

MOST READ

காணொளி
வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

title