May 15, 2026 - 04:00 PM -
0
நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலைமை காரணமாக யாழ்ப்பாணத்தில் இன்று (15) கடும் மழை பெய்து வருகிறது.
நாளை (16) யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த சுழிபுரம் கிழக்கை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் மின்னல் தாக்கத்தில் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மின்னல் தாக்கங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அனர்த்த நிலைமைகளை தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
--
