May 29, 2026 - 05:35 PM -
0
இம்முறை வெசாக் பண்டிகையை ஒட்டி கொழும்பு நகரில் நடத்தப்படவுள்ள வெசாக் வலயங்கள், தோரணங்கள் மற்றும் வெசாக் கூடுகள் கண்காட்சியை முன்னிட்டு, கொழும்பு நகருக்குள் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
கொழும்பு நகரை மையமாகக் கொண்டு கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கறுவாதோட்டம், தெமட்டகொடை மற்றும் முகத்துவாரம் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குள் இந்த வெசாக் வலயங்களும் வெசாக் தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன், அந்த நகரங்களை மையப்படுத்தியே இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

