Header Logo

செய்திகள்
இறுதி முடிவை எடுக்க வௌ்ளை மாளிகையில் விசேட கலந்துரையாடல்

May 29, 2026 - 09:40 PM -

0

இறுதி முடிவை எடுக்க வௌ்ளை மாளிகையில் விசேட கலந்துரையாடல்

ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட தான் இன்னும் தயாராக இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள நீண்ட அறிக்கை ஒன்றில், இது குறித்து "இறுதி முடிவை எடுப்பதற்காக" வெள்ளை மாளிகையில் தான் விசேட கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது தொடர்பாக தற்காலிக உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 

எவ்வாறாயினும், இறுதி ஒப்பந்தத்திற்கான மேலதிக நிபந்தனைகளையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களையோ அல்லது குண்டுகளையோ வைத்திருக்கமாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும் என்பதும், கடல்சார் போக்குவரத்திற்கு எவ்வித வரிகளோ அல்லது கட்டுப்பாடுகளோ இன்றி ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்க வேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளில் உள்ளடங்குகின்றன.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title