Header Logo

செய்திகள்
பல கோடி பெறுமதியான போலி டொலர்களுடன் பெண் ஒருவர் கைது

Jun 8, 2026 - 05:17 PM -

0

பல கோடி பெறுமதியான போலி டொலர்களுடன் பெண் ஒருவர் கைது

வெளிநாடு ஒன்றில் அச்சிடப்பட்ட 60 கட்டு போலி 100 டொலர் நோட்டுகளுடன் (700,000 டொலர்) இலங்கை பெண் ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் கைது செய்துள்ளது. 

இன்று (08) முற்பகல் கொட்டிகாவத்தை பகுதியில் அமைந்துள்ள 53 வயதுடைய சந்தேக நபரான பெண்ணின் வீட்டில் வைத்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த பணத்தொகையின் இலங்கை ரூபா பெறுமதி 21 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இந்த பண நோட்டுகள் வெளிநாட்டில் அச்சிடப்பட்டு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கிப்பதுடன், இந்த கடத்தல் சம்பவத்துடன் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவருக்கும் தொடர்பிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த போலி பண நோட்டுகளை ஒரு டொலர் 284 ரூபா என்ற வீதத்தில் மாற்றுவதற்காக தயாராக இருந்துள்ளதுடன், உள்நாட்டு வர்த்தகர்களை ஏமாற்றி இந்த டொலர் நோட்டுகளை அவர்கள் பரிமாற்றம் செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண் நாளை (09) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

title