Jun 8, 2026 - 07:34 PM -
0
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, இதுவரை உணவோ அல்லது நீரோ உட்கொள்ளவில்லை என்று அவரது மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார்.
இன்று (08) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று சுரேஷ் சலேயின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு வெளியில் வந்த போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
"அவர் இன்னும் உணவோ, நீரோ எதுவும் உட்கொள்ளவில்லை. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைத்தியர்கள் கண்காணித்து வருகிறார்கள், சேலைன் ஏற்றப்படுகிறது. அவர் உண்பதோ, குடிப்பதோ இல்லை; வேறு எதையும் செய்வதில்லை. அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை" என்று அவர் கூறினார்.
சுரேஷ் சலே தற்போது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

