Jun 10, 2026 - 12:58 PM -
0
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, 16.5 மில்லியன் ரூபாய் தென் மாகாண சபை உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டின் கீழ், தென் மாகாணத்திலுள்ள பொதுத் தன்னார்வ சங்கங்களுக்கு நாற்காலிகளை வழங்குவதற்காக, முறையான கொள்முதல் நடைமுறைகளை மீறி தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அந்நிறுவனத்திற்கு சாதகமாகச் செயல்பட்டமைக்காகவும், தென் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த 54 மாகாண சபை உறுப்பினர்களின் வீட்டு அலுவலகங்களுக்கு அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட 16,361 நாற்காலிகளைக் கொண்டு சென்று ஒப்படைக்கச் செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமைக்காகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

