Header Logo

செய்திகள்
வீட்டுப் பணிப்பெண்கள் குறித்து குவைத் அரசாங்கம் அதிரடி தீர்மானம்

Jun 10, 2026 - 01:23 PM -

0

வீட்டுப் பணிப்பெண்கள் குறித்து குவைத் அரசாங்கம் அதிரடி தீர்மானம்

குவைத் நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களை அழைப்பது இலங்கை உட்பட 10 நாடுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 

குவைத் நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வீட்டுப் பணியாளர் துறையை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய சட்டதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

இதன் கீழ், வீட்டுப் பணியாளர்களை அழைப்பது 10 நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், 27 நாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

பணியாளர்களை அழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள 10 நாடுகள்:

 

இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், நேபாளம், தென்னாப்பிரிக்கா, பெனின், எரித்திரியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய 9 நாடுகளிலிருந்து பெண் மற்றும் ஆண் ஆகிய இருபாலாரையும் அழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், செனகல் நாட்டிலிருந்து பணியாளர்களைப் பணியமர்த்துவது ஆண்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதேவேளை, கென்யா, உகாண்டா, நைஜீரியா, மடகாஸ்கர் மற்றும் பூட்டான் உள்ளிட்ட 27 நாடுகளிலிருந்து வீட்டுப் பணியாளர்களை அழைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இவற்றில் சில நாடுகளிலிருந்து பெண் பணியாளர்களுக்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆண் பணியாளர்களை அழைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
நெல்லுக்கான உத்தரவாத விலையை உடன் வழங்குங்கள் - இளையதம்பி சிறிநாத்

நெல்லுக்கான உத்தரவாத விலையை உடன் வழங்குங்கள் - இளையதம்பி சிறிநாத்

செம்மணி இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன!

செம்மணி இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன!

எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்!

எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்!

ஏற்றுமதியாளர்களை முடக்கி நிலையான அபிவிருத்தியா?

ஏற்றுமதியாளர்களை முடக்கி நிலையான அபிவிருத்தியா?

ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு குழு ஆதரவு!

ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு குழு ஆதரவு!

மீன்பிடித்துறை அமைச்சரால், கொந்தளித்த அர்ச்சுனா

மீன்பிடித்துறை அமைச்சரால், கொந்தளித்த அர்ச்சுனா

அவசர கால நிலை அமுலில் இருப்பினும்  குற்றங்கள் குறையவில்லை

அவசர கால நிலை அமுலில் இருப்பினும் குற்றங்கள் குறையவில்லை

9 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன!

9 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன!

எதற்காக இந்த அவசரகால சட்டம்?

எதற்காக இந்த அவசரகால சட்டம்?

அளவுக்கு அதிக வரியால் ஆட்சி முறியும் அபாயம்!

அளவுக்கு அதிக வரியால் ஆட்சி முறியும் அபாயம்!

title