Header Logo

செய்திகள்
உலக தரவரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறினார் ருமேஷ் தரங்க!

Jun 10, 2026 - 08:38 PM -

0

உலக தரவரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறினார் ருமேஷ் தரங்க!

உலக தடகள சம்மேளனம் இன்று (10) வெளியிட்டுள்ள புதிய ஈட்டி எறிதல் உலக தரவரிசையில் இலங்கையின் ருமேஷ் தரங்க குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அவர் உலக அளவில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

புதிய வகைப்படுத்தலின்படி, ருமேஷ் தரங்க 1,324 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றுள்ளார். 

இப்பட்டியலில் 1,360 புள்ளிகளைப் பெற்றுள்ள ஜேர்மனி வீரர் ஜூலியன் வெபர் முதலிடத்தைப் பிடித்துள்ளதோடு, இரண்டாம் இடத்தை கிரெனடா நாட்டின் எண்டர்சன் பீட்டர்ஸ் பெற்றுள்ளார். 

இரண்டாம் இடத்தில் உள்ள எண்டர்சன் பீட்டர்ஸுக்கும் (1,326 புள்ளிகள்) ருமேஷ் தரங்கவிற்கும் இடையே வெறும் 2 புள்ளிகள் மட்டுமே மிகக் குறைந்த இடைவெளியாகக் காணப்படுவது சிறப்பம்சமாகும். 

உலக தடகளத் துறையின் ஜாம்பவான்களான இரண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற வீரர்களை விடவும் முந்திச் செல்ல ருமேஷ் தரங்கவிற்கு இங்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. 

இதன்படி, உலகப் புகழ்பெற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இந்த தரவரிசையில் 5வது இடத்திலும், பாகிஸ்தானின் அர்ஷாத் நதீம் 10வது இடத்திலும் உள்ளனர். 

இத்தாலியின் ரோம் நகரில் அண்மையில் நடைபெற்ற 'டயமண்ட் லீக்' (Diamond League) தடகளத் தொடரிலேயே ருமேஷ் தரங்க இந்த சிறப்பான சாதனையை எட்டினார். 

அங்கு 92.62 மீற்றர் என்ற அதிவிசித்திர தூரத்திற்கு ஈட்டி எறிந்து புதிய இலங்கை சாதனையையும், புதிய தொடர் சாதனையையும் அவர் படைத்தார். 

இந்தத் திறமையின் மூலம் ருமேஷ் தரங்க சர்வதேச தடகள அரங்கில் இலங்கை நாமத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.


MOST READ

காணொளி
நெல்லுக்கான உத்தரவாத விலையை உடன் வழங்குங்கள் - இளையதம்பி சிறிநாத்

நெல்லுக்கான உத்தரவாத விலையை உடன் வழங்குங்கள் - இளையதம்பி சிறிநாத்

செம்மணி இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன!

செம்மணி இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன!

எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்!

எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்!

ஏற்றுமதியாளர்களை முடக்கி நிலையான அபிவிருத்தியா?

ஏற்றுமதியாளர்களை முடக்கி நிலையான அபிவிருத்தியா?

ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு குழு ஆதரவு!

ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு குழு ஆதரவு!

மீன்பிடித்துறை அமைச்சரால், கொந்தளித்த அர்ச்சுனா

மீன்பிடித்துறை அமைச்சரால், கொந்தளித்த அர்ச்சுனா

அவசர கால நிலை அமுலில் இருப்பினும்  குற்றங்கள் குறையவில்லை

அவசர கால நிலை அமுலில் இருப்பினும் குற்றங்கள் குறையவில்லை

9 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன!

9 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன!

எதற்காக இந்த அவசரகால சட்டம்?

எதற்காக இந்த அவசரகால சட்டம்?

அளவுக்கு அதிக வரியால் ஆட்சி முறியும் அபாயம்!

அளவுக்கு அதிக வரியால் ஆட்சி முறியும் அபாயம்!

title