Header Logo

செய்திகள்
போதைப்பொருள் பாவனையுடன் பேருந்துகளை இயக்கிய 4 சாரதிகள் கைது

Jun 12, 2026 - 04:36 PM -

0

போதைப்பொருள் பாவனையுடன் பேருந்துகளை இயக்கிய 4 சாரதிகள் கைது

போதைப்பொருள் பாவனையுடன் பேருந்து சேவையில் ஈடுபட்டிருந்த 4 சாரதிகள் மற்றும் 2 நடத்துநர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

போதைப்பொருள் பாவனையுடன் பயணிகள் பேருந்துகளை இயக்கும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களைப் பரிசோதிக்கும் விசேட நடவடிக்கையொன்றைப் பொலிஸார் நேற்று (11) ஹொரணை பிரதான பேருந்து நிலைய வளாகத்தில் முன்னெடுத்த போதே சந்தேகநபர்கள் இவ்வாறு கைதாகியுள்ளனர். 

ஹொர​ணை, இங்கிரிய, மொரகஹஹேன மற்றும் அங்குருவாதொட்ட ஆகிய பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்துப் பிரிவு உத்தியோகத்தர்கள், தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவன அதிகாரிகளுடன் இணைந்து இந்தச் சோதனையை நடத்தினர். 

இதன்போது ஹொரணை நகரிலிருந்து புறப்படும் மற்றும் நகரத்தினூடாகப் பயணிக்கும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

இங்கு மொத்தம் 151 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், போதைப்பொருள் பாவனையுடன் பேருந்து சேவையில் ஈடுபட்டிருந்த 4 சாரதிகள் மற்றும் 2 நடத்துநர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன், அந்த சாரதிகளால் செலுத்தப்பட்ட 4 பேருந்துகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

கைதானவர்கள் 34 முதல் 61 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் குடாஓடுவ, பெல்லபிட்டிய, கழுகஹஹின்ன, கோவின்ன மற்றும் எகொடஹேன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பாக ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title