Header Logo

பல்சுவை
காப்பீட்டுப் பணத்திற்கு ஆசைப்பட்டு கணவனைக் கொன்ற மனைவி!

Jun 17, 2026 - 10:09 AM -

0

காப்பீட்டுப் பணத்திற்கு ஆசைப்பட்டு கணவனைக் கொன்ற மனைவி!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் பெலகாவியை சேர்ந்தவர் சந்தீப் (வயது 46). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி சுமா. சந்தீப் ராணுவத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது சுமாவுக்கு அதே பகுதியை சேர்ந்த புண்டலிகா டோம்பர் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. 

சந்தீப் தனது பெயரில் 2 கோடி ரூபாவுக்கு காப்பீடு எடுத்து இருந்தார். சந்தீப் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி விபத்தில் சிக்கினார். அவர் அதே பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். விபத்தை பயன்படுத்தி கணவரை கொலை செய்துவிட்டு காப்பீடு தொகையை பெற சுமா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். 

அதன்படி மார்ச் மாதம் 15 ஆம் திகதி சிகிச்சையில் இருந்த கணவருக்கு ஊசி மூலம் விஷத்தை செலுத்தினர். சிறிது நேரத்தில் சந்தீப் பரிதாபமாக இறந்தார். வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி கணவர் இறந்து விட்டதாக உறவினர்களை நம்ப வைத்து இறுதி சடங்குகளை செய்தார். 

பின்னர் காப்பீட்டு தொகையை பெறுவதற்காக போலியான ஆவணங்களை தயார் செய்து காப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பித்தார். 

இதனால் சந்தேகம் அடைந்த அவர் சகோதரரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பொலிஸில் புகார் அளித்தார். பொலிஸார் சுமாவை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவருக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பொலிஸார் வழக்கு பதிவு செய்து சுமா அவரது கள்ளக்காதலன் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்தவர்கள் என 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.


MOST READ

காணொளி
அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

title