Header Logo

சினிமா
நாஞ்சில் விஜயன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

Jun 17, 2026 - 06:59 PM -

0

நாஞ்சில் விஜயன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக நடித்து, அதன்மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சூர்யா தேவி என்பவர் புகார் ஒன்றை அளித்தார். 

இந்த புகார் குறித்து செய்தியாளர்களிடம் சூர்யா தேவி கூறியதாவது, 

கடந்த 2019 இல் நாஞ்சில் விஜயனின் தங்கை திருமணத்திற்காக ரூபாய் 2 லட்சம் கடனாக வழங்கினேன். ஒரு உதவி மனப்பாண்மையில் தான் நான் பணஉதவி செய்தேன். 

கடந்த மூன்று வருடத்திற்கு முன்பே இந்த விஷயத்தை நான் சொல்லி இருந்தால் நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள். இப்பொழுது உள்ள இக்கட்டான சூழலில் எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்தே நான் நாஞ்சில் விஜயனுக்கு போன் செய்து, எனக்கு அவசரமான செலவு ஒன்று உள்ளது என்று கூறினேன். அவர் அதற்கு சரி நான் தருகிறேன் என்றே சொல்லிக்கொண்டு வந்தார். 

எனக்கு சென்னையில் அவர் முகவரி தெரியாது என்பதால் நான் விட்டுவிட்டேன். அவர் எனக்கு போன் செய்தபோதெல்லாம், வாட்ஸ் அப்பில் மட்டுமே தொடர்பு கொண்டார். சாதாரண அழைப்பில் போன் பேசினால், கால் ரெக்கார்டு செய்து விடுவேன் என்பதற்காக கிரிமினலாக அதை தவிர்த்து வந்தார். 

நான் கொடுத்த பணத்திற்கு என்னிடம் ஆதாரம் கிடையாது. நான் அவர் வலசரவாக்கம் வீட்டில் வைத்து தான் கொடுத்தேன். அதற்கான ஆதாரம் என்னிடம் இல்லாததால், அதை மனதில் வைத்துகொண்டு, நான் அவரை மிரட்டுவதாக சிம்பத்தி ஏற்படுத்துகிறார். 

நான் ஏற்கனவே திருச்சி எஸ்.பி அலுவலத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளேன். அந்த புகார் இங்கு மாற்றப்பட்டதால், நான் இப்போது சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்துள்ளேன். என்னை ஒரு வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்கிறார். ஆட்களை வைத்து என்னை மிரட்டுகிறார். 

மதுரையில் நடந்த எக்ஸ்போ-விற்கு அவர் என்னை அழைத்ததின் பேரில் நான் அங்கு சென்றேன். அப்போது துணி வாங்கியதற்கான பணத்தை நான் கொடுத்தபோது, அது நான் உனக்கு கொடுக்கவேண்டிய பணம்தான் என்று கூறினார். 

இதையடுத்து அந்த எக்ஸ்போ-வை முடித்துவிட்டு நான் வெளியே வந்தபோது, மூன்று பேர்களை வைத்து என்னை மடக்கி பணத்தை கொடுக்காமல் போவதாக வீடியோ எடுத்து என்னை மிரட்டுகிறார். மறுபடியும் இந்த எக்ஸ்போ-விற்கு வந்தால் 108 பெண்களிடம் என்னைகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வைப்பேன் என்று கூறுகிறார். 

நான் அவரிடம் என் பணத்தை பொறுமையாக வாங்கலாம் என்று நினைத்தேன், எனக்கும் குழந்தைகள் உள்ளது. அதனால்தான் புகார் மூலமாகவாவது இதை எடுத்துச் செல்ல இங்கு வந்துள்ளேன். 

அவரை விசாரித்து எனக்கு வரவேண்டிய பணத்தை வாங்கி கொடுத்தால் போதும். அவர் என்னிடம் வாட்ஸ் அப்பில் பேசின அனைத்து பதிவுகளும் என்னிடம் உள்ளது. 

இவ்வாறு நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது சூர்யா தேவி என்பவர் குற்றம்சாட்டினார்.


MOST READ

காணொளி
படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

title