Header Logo

பல்சுவை
CCTV வைத்து மனைவியை 24 மணி நேரமும் கண்காணித்த கணவன்!

Jun 19, 2026 - 02:16 PM -

0

CCTV வைத்து மனைவியை 24 மணி நேரமும் கண்காணித்த கணவன்!

நடத்தை சந்தேகத்தால் வீட்டுக்குள் கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணித்ததால் விரக்தி அடைந்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

மும்பை அருகே உள்ள தானேயை அடுத்த அம்பர்நாத் பகுதியை சேர்ந்தவர் நிதின்தில்கர். வைத்தியர்  இவருக்கும், விசாகா (வயது26) என்ற பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. 

திருமணமான சில நாட்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு விசாகாவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் உடல் அளவிலும், மனதளவிலும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், விசாகா தனது கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் விசாகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை அனுப்பிவைத்தனர். 

இதற்கிடையே தனது மகள் கணவர் வீட்டினரின் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாக விசாகாவின் பெற்றோர் சிவாஜி நகர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப்புகார் குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

அதாவது வைத்தியர் நிதின் தில்கர், தனது மனைவி விசாகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அவரது ஒவ்வொரு அசைவையும், நடமாட்டத்தையும் கண்காணிப்பதற்காக வீட்டின் உள்ளேயும், வெளியேயும் இரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளார். விசாகா யாரிடம் பேசுகிறார்? என்ன செய்கிறார்? என்பதை இந்த கேமராக்கள் மூலம் அவர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

வீட்டின் எல்லையை தாண்டி விசாகா அக்கம்பக்கத்தினருடன் சாதாரணமாக பேசினால் கூட, அவரை மிருகத்தனமாக கணவர் மற்றும் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தியுள்ளனர். புகுந்த வீட்டில் நரக வேதனையை அனுபவித்த விசாகா, இந்த துயரத்தை தனது தாயிடம் போனில் கூறி கதறி அழுதுள்ளார். 

மகளின் நிலையை கேட்டு பதறிய பெற்றோர், நேரில் வந்து அவரை மீட்டு செல்வதற்குள்ளாகவே, விசாகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து, மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வைத்தியர் நிதின் தில்கர், அவரது தாய் சாயா மற்றும் சகோதரர் நினாத் ஆகிய 3 பேரையும் பொலிஸார் நேற்று (18) கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

வைத்தியர் கணவரின் விபரீத புத்தியால், திருமணமான 47 நாட்களில் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

title