Jun 20, 2026 - 10:28 PM -
0
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை, தும்பாலை பகுதியிலுள்ள வயலொன்றில் காட்டு யானையொன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வயல் நிலப் பாதுகாப்பிற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே இந்த யானை உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த வெல்லாவெளி பொலிஸார், மின்சார வேலி அமைத்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த வயலின் உரிமையாளரைக் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த யானையின் மரணம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன், உயிரிழந்த யானையின் உடலை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
--

