Header Logo
Mogo Academy

சினிமா
45 வயதில் தாயான பத்மபிரியா!

Jul 27, 2026 - 04:39 PM -

0

45 வயதில் தாயான பத்மபிரியா!
Mobitel inner

வாழ்க்கையின் 365 நாட்கள் என குழந்தையின் கைகள் தனது ஆடையை பிடித்திருக்கும் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார். 

மிருகம், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், பட்டியல் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் பத்மபிரியா. சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போதே ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் நடிப்பில் இருந்து விலகி இருந்த பத்மபிரியா 2022 ஆம் ஆண்டு முதல் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார். திருமணமாகி 10 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாத பத்மபிரியா தற்போது 45 வயதில் தாயான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

தனது குழந்தைக்கு முதல் பிறந்தநாள் நிறைவடைந்ததை சுட்டிக்காட்டி அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘வாழ்க்கையின் 365 நாட்கள் என குழந்தையின் கைகள் தனது ஆடையை பிடித்திருக்கும் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார். கடந்த ஒரு வருடமாக சமூக வலைதளங்களில் பிசியாக இருந்த போதிலும் குழந்தை குறித்து அவர் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. 

இப்போது தாயான மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தாலும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை பத்மபிரியா வெளிப்படுத்தவில்லை. பத்மபிரியாவின் பதிவிற்கு நித்யாமேனன், பார்வதி திருவோத்து, மீராநந்தன் உள்பட பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

அதில் நடிகை அபிராமியின் கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் என் அன்பு தெரியும்’ என பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பத்மபிரியா ‘உங்களால்தான் எங்களுக்கு இது கிடைத்தது’ என பதிலளித்திருந்தார்.


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara