Header Logo
SLIC
Rhythams of Lanka
விளையாட்டு
இந்திய அணியில் இணையும் காஷ்மீரின் முதல் வீரர்!

Aug 3, 2026 - 03:57 PM

இந்திய அணியில் இணையும் காஷ்மீரின் முதல் வீரர்!
Mobitel inner

இலங்கை அணிக்கு எதிரான வரவிருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி (Auqib Nabi) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த காஷ்மீர் பள்ளத்தாக்கின் முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். 

தொடக்கத்தில் அணியில் இடம்பெற்றிருந்த பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது ஏற்பட்ட இடது முழங்கால் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், இலங்கை அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளார். 

இந்திய அணிக்கு நபி அழைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். "ஆண்களுக்கான தேர்வு குழு, பும்ராவுக்கு பதிலாக ஆகிப் நபியை தேர்வு செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த இந்த வேகப்பந்து வீச்சாளர் முதன்முறையாக இந்திய தேசிய அணிக்கு தேர்வாகியுள்ளார்," என்று பிசிசிஐ (BCCI) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தை சேர்ந்த 29 வயதான நபி, பர்வேஸ் ரசூல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோருக்கு பிறகு இந்திய அணிக்கு தேர்வாகும் ஜம்மு-காஷ்மீரின் மூன்றாவது வீரர் ஆவார். ரசூல் மற்றும் மாலிக் ஆகியோர் இதற்கு முன் குறைந்த ஓவர் போட்டிகளில் (limited overs format) இந்தியாவுக்காக விளையாடியுள்ளனர். 

கடந்த இரண்டு ரஞ்சி கிண்ணங்களில் மொத்தம் 104 விக்கெட்டுகளை (2025 - 26 சீசனில் மட்டும் 60 விக்கெட்டுகள்) வீழ்த்திய நபி, ஜம்மு-காஷ்மீர் அணி தனது முதல் ரஞ்சி கிண்ணத்தை வெல்வதில் முக்கிய பங்காற்றினார். அவர் பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கக்கூடியவர். 

சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா 'ஏ' அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார், அங்கு இரண்டு முதல் தரப் போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். முக்கிய வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, தனது முழங்காலில் ஏற்பட்ட வீக்கம் ஆரம்பத்தில் தோன்றியதை விட தீவிரமானதாக இருந்ததால் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara