Header Logo
இந்தியா
பிஹார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

Aug 4, 2026 - 08:12 AM

பிஹார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!
Mobitel inner

பிஹாரின் பங்கிபூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி இடைத்​தேர்​தலில் ஜன் சுராஜ் கட்சித் தலை​வர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்​றுள்​ளார். குஜ​ராத்​தின் மஞ்​சல்​பூர் தொகு​தி​யில் பாஜக​வும், மத்​திய பிரதேசத்​தின் டட்​டியா தொகு​தி​யில் காங்​கிரஸும் வெற்றி பெற்றுள்ளன. 

பிஹாரின் பங்​கிபூர், குஜ​ராத்​தின் மஞ்​சல்​பூர், மத்​திய பிரதேசத்தின் டட்​டியா ஆகிய 3 சட்​டப்​பேர​வைத் தொகுதிகளுக்கும் கடந்த 30-ம் திகதி இடைத்​தேர்​தல் நடை​பெற்றது. இதில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்​டன. பிஹாரின் பங்​கிபூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் பாஜக சார்​பில் நீரஜ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்​பில் ரேகா குமாரி, ஜன் சுராஜ் தலை​வர் பிர​சாந்த் கிஷோர் உள்​ளிட்​டோர் போட்டியிட்டனர். 

இந்த தொகு​தி​யின் வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது ஆரம்​பம் முதலே பிர​சாந்த் கிஷோர் முன்​னிலை​யில் இருந்​தார். அவர் 64,151 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். பாஜக வேட்​பாளர் நீரஜ் குமாருக்கு 44,827 வாக்​கு​களும், ராஷ்டிரிய ஜனதா தள வேட்​பாளர் ரேகா குமாரிக்கு 14,273 வாக்​கு​களும் கிடைத்​தன. 

இதுகுறித்து பிர​சாந்த் கிஷோர் கூறும்போது, “குற்​றப்பின்​னணி உடைய ஒரு​வரை பிஹாரின் முதல்​வ​ராக பாஜக தலைமை நியமித்து உள்​ளது. அவரை மாற்​றி​விட்டு நல்ல தலை​வரை, முதல்​வ​ராக நியமிக்க வேண்​டு​கிறேன். பங்​கிபூர் இடைத்​தேர்​தல் மூலம் இந்த கருத்தை மக்​கள் முன்​னிறுத்தி உள்​ளனர். 

எனக்கு வாக்​களித்த அனை​வருக்​கும் நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன். நல்ல தலைமை கிடைத்​தால் பிஹார் மாநிலம் அதிவேக​மாக முன்​னேறும். நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். பிஹார் மக்களுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம். பங்கிபூர் தொகுதி மக்கள் எங்களது கட்சிக்கு அங்கீகாரத்தை வழங்கி உள்ளனர்” என்றார். 

பிஹார் முதல்​வரும் பாஜக மூத்த தலை​வரு​மான சாம்​ராட் சவுத்ரி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “பங்​கிபூர் ஜனநாயக திரு​விழா​வில் ஜன் சுராஜ் கட்​சியை மக்​கள் தேர்வு செய்​துள்​ளனர். மக்​களின் முடிவை மதிக்​கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார். குஜ​ராத்​தின் மஞ்​சல்​பூர் தொகு​தி​யில் ஆளும் பாஜக சார்​பில் போட்டியிட்ட சதீஷ் படேல், 55,481 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்றார். காங்​கிரஸ் வேட்​பாளர் பிக்​கா​பாய் ரபாரிக்கு 24,851 வாக்​கு​கள் மட்​டுமே கிடைத்​தன. 

மத்​திய பிரதேசத்​தின் டட்​டியா தொகு​தி​யில் காங்​கிரஸ் வேட்​பாளர் கன்​ஷ்​யாம் சிங் 66,757 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். பாஜக வேட்​பாளர் அசுதோஷ் திவாரிக்கு 60,741 வாக்​கு​கள் கிடைத்​தன. 

நீட் வினாத்​தாள் கசிவுக்கு எதி​ராக பிஹாரில் நடை​பெற்ற போராட்​டங்​களின்​போது மாணவ, மாண​வியர் மீது பொலிஸார் துப்​பாக்​கிச்​சூடு நடத்​தினர். இதனால் ஜென்-ஸி இளைஞர்​களின் வாக்​கு​கள் பாஜக​வுக்கு கிடைக்​க​வில்லை என்று கூறப்​படு​கிறது. 

பிஹார் முதல்​வ​ராக இருந்த நிதிஷ் குமார் கடந்த ஏப்​ரலில் மாற்றப்​பட்​டார். இதனால் அவர் சார்ந்த குர்மி சமு​தாய மக்​கள், பங்​கிபூர் இடைத்​தேர்​தலில் பாஜக​வுக்கு எதி​ராக வாக்​களித்​த​தாகக் கூறப்​படு​கிறது. இதுபோன்ற காரணங்​களால் பங்​கிபூர் தொகு​தி​யில் பிர​சாந்த் கிஷோர் வெற்றி பெற்​றுள்​ளார். கடந்த 2025 பிஹார் தேர்​தலில் 238 தொகு​தி​களில் போட்​டி​யிட்​ட ஜன் சுராஜ் ஒரு தொகு​தி​யில்​கூட வெற்றி பெற​வில்​லை. இதில் 3.3% வாக்​கு​கள்​ மட்​டுமே கிடைத்​தன.


MOST READ

காணொளி
எப்படி அமைச்சரே இதை ஏற்றுக்கொள்வது?

எப்படி அமைச்சரே இதை ஏற்றுக்கொள்வது?

பிரதான பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வௌ்ளம்!

பிரதான பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வௌ்ளம்!

இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துங்கள்!

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துங்கள்!

3 விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடினோம்!

3 விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடினோம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை!

ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை!

Mobitel Upahara