Header Logo
செய்திகள்
மோட்டார் சைக்கிள்களுக்காக பிரதான வீதிகளில் விசேட ஒழுங்கு!

Aug 4, 2026 - 10:52 AM

மோட்டார் சைக்கிள்களுக்காக பிரதான வீதிகளில் விசேட ஒழுங்கு!
Mobitel inner

நாட்டின் பிரதான வீதிகளில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவதற்காகச் விசேட ஒழுங்கு ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இதன் முதற்கட்டத்தைக் களுவாஞ்சிகுடி நகரிலிருந்து தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். 

நாட்டில் ஆண்டுதோறும் நிகழும் வீதி விபத்துகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்துகள் என்பதால், அதைக் குறைப்பதற்காகவே இந்தச் விசேட ஒழுங்கு அறிமுகப்படுத்தப்படுவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 

"இலங்கையில் பொதுவாக வீதி விபத்துகளால் சுமார் 2,500 பேர் உயிரிழக்கின்றனர். 2025 ஆம் ஆண்டில் 2,750 பேர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் முன்னாலும் பின்னாலும் பயணித்தவர்களில் 2019 ஆம் ஆண்டில் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஒன்பது ஆண்டுகளில் மோட்டார் சைக்கிள்களில் சென்று 9,000 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் வீதி விபத்துகளையும் மரணங்களையும் தடுக்க வேண்டுமென்றால், மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இலங்கையில் முதன்முறையாகக் களுவாஞ்சிகுடி நகரத்தில் மோட்டார் சைக்கிள்களுக்காகவே பிரதான வீதியின் ஒரு பகுதியை நாங்கள் ஒதுக்குகிறோம். வெள்ளைக் கோட்டினால் அல்லாமல், தடுப்புகளைப் (Breakers) போட்டு உருவாக்குகிறோம். ஏனெனில் அப்பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் சற்று அதிகமாகும்." என்றார்.


MOST READ

காணொளி
செம்மணியின் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்!

செம்மணியின் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்!

ரவிகரன் கோரிக்கை!

ரவிகரன் கோரிக்கை!

அரசின் நடவடிக்கை தான் என்ன?

அரசின் நடவடிக்கை தான் என்ன?

ஹட்டன் - கொழும்பு வீதியில் மீண்டும் போக்குவரத்து!

ஹட்டன் - கொழும்பு வீதியில் மீண்டும் போக்குவரத்து!

கொத்மலை வான் கதவுகள் திறப்பு

கொத்மலை வான் கதவுகள் திறப்பு

செம்மணியில் இதுவரை 481 எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணியில் இதுவரை 481 எலும்புக்கூடுகள் மீட்பு!

நாங்கள் எல்லாவற்றையும் Postive ஆக பார்க்கும் கட்சி!

நாங்கள் எல்லாவற்றையும் Postive ஆக பார்க்கும் கட்சி!

நஷ்டத்தை சந்திக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதற்காக ஒப்பந்தத்தை வழங்குகின்றோம்!

நஷ்டத்தை சந்திக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதற்காக ஒப்பந்தத்தை வழங்குகின்றோம்!

கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு

கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு

கடந்த கால அரசாங்கத்தைப் போல், அல்ல நாங்கள்!

கடந்த கால அரசாங்கத்தைப் போல், அல்ல நாங்கள்!

Mobitel Upahara