Aug 4, 2026 - 07:16 PM
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய திடீர் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (04) பிற்பகல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அண்மைய அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அனர்த்தங்களினால் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 56 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தங்களால் 3 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒரு வீடு முழுமையாகவும் 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

