Header Logo
செய்திகள்
இரத்மலானை வீட்டின் மேல் குண்டு வீச்சு! பாதாள உலகக் குழுவிற்குத் தொடர்பா?

Aug 5, 2026 - 10:21 AM

இரத்மலானை வீட்டின் மேல் குண்டு வீச்சு! பாதாள உலகக் குழுவிற்குத் தொடர்பா?
Mobitel inner

இன்று (05) அதிகாலை இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பாதாள உலகக் குழுவின் தொடர்புகள் குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இருமாடி வீடொன்றின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், அதில் ஒன்று வெடித்துள்ள நிலையில் மற்றைய கைக்குண்டு வீட்டின் தோட்டத்தில் விழுந்து கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்தத் தாக்குதலினால் எவருக்கும் எவ்வித உயிராபத்தும் ஏற்படவில்லை என்பதுடன், வீட்டின் இரு ஜன்னல் கண்ணாடிகள் மாத்திரமே சேதமடைந்துள்ளன.

 

தாக்குதலுக்கு இலக்கான வீட்டின் உரிமையாளர், தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகக் கூறப்படும் 'ரஸல் அலோசியஸ் ஸ்மித்' என்பவரின் தந்தையின் சகோதரருடைய மகன் எனத் தெரியவந்துள்ளது.

 

ரஸல் அலோசியஸ் ஸ்மித் என்பவர், பாதாள உலகக் குழுத் தலைவர்களான 'அஞ்சு' எனப்படும் சிங்ஹார அமல் ஷமிந்த சில்வா மற்றும் 'தர்மே' எனப்படும் எல்லாவல லியனகே தர்மசிரி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளதாகவும், பின்னர் அஞ்சுவுடன் அவருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.


MOST READ

காணொளி
செம்மணியின் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்!

செம்மணியின் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்!

ரவிகரன் கோரிக்கை!

ரவிகரன் கோரிக்கை!

அரசின் நடவடிக்கை தான் என்ன?

அரசின் நடவடிக்கை தான் என்ன?

ஹட்டன் - கொழும்பு வீதியில் மீண்டும் போக்குவரத்து!

ஹட்டன் - கொழும்பு வீதியில் மீண்டும் போக்குவரத்து!

கொத்மலை வான் கதவுகள் திறப்பு

கொத்மலை வான் கதவுகள் திறப்பு

செம்மணியில் இதுவரை 481 எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணியில் இதுவரை 481 எலும்புக்கூடுகள் மீட்பு!

நாங்கள் எல்லாவற்றையும் Postive ஆக பார்க்கும் கட்சி!

நாங்கள் எல்லாவற்றையும் Postive ஆக பார்க்கும் கட்சி!

நஷ்டத்தை சந்திக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதற்காக ஒப்பந்தத்தை வழங்குகின்றோம்!

நஷ்டத்தை சந்திக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதற்காக ஒப்பந்தத்தை வழங்குகின்றோம்!

கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு

கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு

கடந்த கால அரசாங்கத்தைப் போல், அல்ல நாங்கள்!

கடந்த கால அரசாங்கத்தைப் போல், அல்ல நாங்கள்!

Mobitel Upahara