Aug 5, 2026 - 12:24 PM
2026 - 27ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (05) அறிவித்து வருகிறார். அதில் இடம்பெற்றுள்ள முக்கியமான ஒதுக்கீடுகள், அவையாவன,
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு, அரச வைத்தியசாலைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
அண்ணன் சீராக, பெண்களின் திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும். இதற்காக 812 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு.
மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். கிராமப் பஞ்சாயத்துகளுக்கே நேரில் சென்று இலவச உடல் பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கப்படும் 1 வைத்தியர், 1 செவிலியர் , 1 இயன்முறை வைத்தியருடன் இந்தச் சேவை வழங்கப்படும். இதற்காக 33 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு.
12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். இதற்காக 6.6 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு.
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்திற்கு 110 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு, 100 சதவிகித மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும்.
கால்நடை வைத்திய தரமான சேவைத் திட்டத்திற்கு 122 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு, இதன்மூலம் 143 புதிய நடமாடும் கால்நடை வைத்தியப் பிரிவுகள் உருவாக்கப்படும்.
கால்நடைகள் காப்போம் திட்டதிற்கு, அதாவது புதிய கால்நடை காப்பீடுத் திட்டத்திற்கு 31 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு.
மீனவர் நலன் உதவித் தொகை திட்டத்திற்கு 135 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு, இதன்மூலம் பணியில்லாக் கால மீன்பிடி உதவித்தொகை 6,000 ரூபாவிலிருந்து, 7000 ரூபாவாக உயர்வு.
கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு 57 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் ஒவ்வோர் ஆண்டும் 10 ஆயிரம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும்.
கூட்டுறவுத் துறைக்கு 8,028 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
மக்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 23,357 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகைக்கு 9,818 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
மண்ணின் மகள் திட்டத்திற்கு 20 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் விவசாயம் செய்திட நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு 165 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவுத் திறன் ஊக்குவிக்கப்படும்.
வெற்றி தொழில் முனைவோர் திட்டத்திற்கு 75 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு.
அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கு முன்னேப்போதும் இல்லாத வகையில், 131 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு, இதன்மூலம் நடப்பாண்டில் 362 மாணவர்கள் பயன்பெறுவர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 1,051 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
விளையாட்டில் ஆர்வமும், திறமையும் கொண்ட 8 முதல் 18 வயதிற்கு உட்பட்ட இளம் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இதற்காக 5 கோடி ரூபா ஒதுக்கீடு.
வெற்றித் திறன் பயிற்சித் திட்டத்திற்கு 150 கோடி ரூபா ஒதுக்கீடு, இதன்மூலம் 12 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும், 1 லட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.

