Aug 5, 2026 - 01:44 PM
ரஷ்யா பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் சுமார 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டில் கிவ் நகரில் நடந்த மிகச் பேரழிவுகரமான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.
இதில் குடியிருப்பு கட்டிடங்கள், ரயில் நிலையம் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் தாக்கப்பட்டதில் சுமார் 44 பேர் காயமடைந்ததாக செலென்ஷ்கி தெரிவித்தார்.
ரஷ்யாவின் பெலிஸ்டிக் ஏவுகணைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, அமெரிக்க தயாரிப்பான பேட்ரியாட் ஏவுகணை இடைமறிப்பு அமைப்புகளை வழங்குமாறு உக்ரைன் தொடர்ந்து நட்பு நாடுகளிடம் வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும், இரவில் நடந்த இந்தத் தாக்குதலில் எந்த ஏவுகணையையும் இடைமறிக்க முடியாமல் போயுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
பங்காளி நாடுகளிடமிருந்து பெலிஸ்டிக் பாதுகாப்பு அமைப்புகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் பாரிய அழிவுகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கிறது என்று அவர் கூறினார்.
கிவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தளவாட மையங்கள் மற்றும் விநியோக மையங்களைத் தாக்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மையங்கள் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் இராணுவப் பொருட்களைச் சேமித்தல், விநியோகித்தல் மற்றும் ட்ரோன்களை உற்பத்தி செய்து விநியோகிப்பதில் முக்கிய வகிபாகத்தை கொண்டிருந்ததாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

