Header Logo
செய்திகள்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90,000 ஐ நெருங்குகிறது: 65 பேர் பலி

Aug 9, 2026 - 01:43 PM

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90,000 ஐ நெருங்குகிறது: 65 பேர் பலி
Mobitel inner

இலங்கையில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90,000 என்ற எல்லையை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு இன்று (09) வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. 

இதன்படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,395 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்றைய (08) தரவுகளின் அடிப்படையில், இதுவரையில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆகப் பதிவாகியுள்ளது. 

கடந்த 6 மாத காலத்தில் பதிவான மொத்த நோயாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். மேல் மாகாணத்தில் 47,310 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதன் சதவீதம் 52.92% ஆகும். 

அத்துடன், மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டமே தொடர்ந்தும் அதிக பாதிப்பைச் சந்தித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அம்மாவட்டத்தில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 19,000 ஐக் கடந்துள்ளது (19,007). 

கொழும்பு மாவட்டத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 17,725 ஆக உயர்ந்துள்ளதுடன், மூன்றாவது அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 6,341 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இவ்வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியிருந்தனர். அந்த எண்ணிக்கை 29,973 ஆகும். 

எனினும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் 8 நாட்களில் மட்டும் 4,048 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara