Aug 11, 2026 - 02:17 PM

நெல் சந்தைப்படுத்தல் சபை வசமுள்ள நெல் இருப்புகளை, கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம்(சதொச) மூலம் அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2026-07-22 ஆம் திகதி நடாத்தப்பட்ட 34 ஆவது உணவுப் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில், அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்யும் நடைமுறைக்கு வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.













