Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
நெடுந்தீவு படகு அனர்த்தம் - அனைவரும் பாதுகாப்பாக மீட்பு

Aug 16, 2026 - 08:16 PM

நெடுந்தீவு படகு அனர்த்தம் - அனைவரும் பாதுகாப்பாக மீட்பு
Mobitel inner

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு சென்ற படகில் பயணித்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார். 

குறித்த படகில் 2 படகோட்டிகள் உட்பட 10 ​பேர் பயணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு பயணித்த படகு ஒன்று உரிய நேரத்தில் நெடுந்தீவை வந்தடையவில்லை என கடற்படைக்கு தகவல் கிடைத்திருந்தது. 

இதனையடுத்து விரைவாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், அந்த படகு அனர்த்தத்திற்குள்ளாகியிருந்த போது அதிலிருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் ​போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த கடற்பகுதி இன்றைய தினம் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் கடற்பயணங்களை தவிர்க்குமாறு முன்னதாகவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் இந்த படகின் ஊடாக அவர்கள் பயணித்திருந்ததாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara