Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
எல் நினோ காரணமாக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்

Aug 19, 2026 - 02:01 PM

எல் நினோ காரணமாக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்
Mobitel Inner 1278
EDEX Inner

தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, சூரிய ஒளிக்கு நேரடியாக ஆளாவதால் பல நோய்கள் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் இனோகா சுரவீர தெரிவித்துள்ளார்.

 

இன்று (19) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற எல் நினோ நிலைமை குறித்தான விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

இந்த அதிக வெப்பத்துடன்கூடிய வானிலை காரணமாக தோலில் ஏற்படும தடிப்புகள், தசைப்பிடிப்பு மற்றும் அதிக வெப்பத்திற்கு ஆளாவதால் உயிரிழப்புகள்கூட ஏற்படக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

இந்த நிலைமைகளுக்கு ஆளாகும் அதிக அபாயத்தைக் கொண்ட குழுக்களாக சிறுவர்கள், முதியவர்கள், தொற்றா நோய்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களைக் குறிப்பிடலாம் என வைத்தியர் இனோகா சுரவீர கூறினார்.

 

அத்துடன், வெளிப்புறங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த நிலைமையினால் கடுமையான அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

குறிப்பாக, இந்த சுகாதாரப் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக நண்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் அதிக வெயிலில் செல்வதைத் தவிர்ப்பது அவசியமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

 

"தோல் வறட்சியடையக்கூடும், இதற்கு முடிந்தவரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதன் மூலம் அந்நிலையைக் குறைத்துக் கொள்ள முடியும். தரமான சருமப் பூச்சுகளைப் பயன்படுத்தலாம். கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரைக் குடியுங்கள். ஆற வைத்த நீர் என்பது குளிரூட்டப்பட்ட நீர் அல்ல."

 

மேலும், நீர் அருந்துதல், மென்மையான நிறமுடைய ஆடைகளை அணிதல், தலைப் பகுதியை மூடுதல் மற்றும் முக்கியமாக நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மருந்துகளை சரியான அளவில் உட்கொள்வது மிகவும் முக்கியமான காரணியாகும் என வைத்தியர் தெரிவித்தார்.

 

இந்த நிலைமையை மேலாண்மை செய்து செயற்படுவதற்காக அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து சுகாதார அமைச்சு செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

இந்த எல் நினோ நிலவரத்தின் போது பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்காக ஏற்கனவே கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பாடசாலை முடிவடையும் நேரத்தில் மாணவர்கள் தொப்பி அல்லது குடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், தேவையற்ற முறையில் திறந்தவெளியில் விளையாடுவதைக் குறைத்து, முடிந்தவரை நிழலான இடங்களில் நடமாடுவது முக்கியம் என்றும் கூறினார்.


MOST READ

காணொளி
இடமாற்றம் ஒரு தீர்வு கிடையாது!

இடமாற்றம் ஒரு தீர்வு கிடையாது!

தன்னிச்சையாகவே செயற்படுகின்றது!

தன்னிச்சையாகவே செயற்படுகின்றது!

போரதீவுப்பற்று ஏன் உள்ளடக்கப்படவில்லை?

போரதீவுப்பற்று ஏன் உள்ளடக்கப்படவில்லை?

573 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

573 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

Mobitel 1278